சமுக உறவில் தேடுங்கள்

Thursday, April 26, 2012

காணாமல் போவது பற்றிய குறிப்புதவி

காணாமல்  போவது பற்றிய குறிப்புதவி

ஒரு மழைநாளில்
தொங்கும் நீர்க்கயிறு பற்றி
இரவல் இறக்கை விரித்து
பூவிதழில் பூக்கும் பனித்திவளையுள் பதுங்கி
பறவையின் ஒலிக்குறிப்பில் இணைந்து
புகைபோக்கியில் நுழைந்து வெளியில் நீர்த்து
விளக்கின் எண்ணையில் கலந்து
குக்கரிலிருந்து வெளியேறும் ஆவியோடு சேர்ந்து
நான் காணமல் போய்விட்டால்
என்னை எங்கு தேடுவீர்கள்?

மேற்கண்டவற்றை நான்
எழுதிவைத்தே செல்கிறேன்
அங்கெல்லாம் தேடமாட்டீர்கள்
என்ற நம்பிக்கையுடன்.

- மயூரா ரத்தினசாமி

No comments:

Post a Comment