நேற்றின் சாம்பல் மாறக்கூடும்
கண்டங்கத்தரியாய்
கண்ணிவெடியாய்
தும்பைப்பூவாய்
அரளி விதையாய்
ஆவாரம்பூவாய்
பவழமல்லியாய்
பாம்புப்பிடாரனாய்
பச்சோந்தியாய்
பாசமலராய்
ஒத்தடமாய்
ஒற்றையடிப்பாதையாய்
...........
...........
நேற்றின் சாம்பல்
கன்னங்கரேலென்றும் இல்லை
வெள்ளை வெளேரென்றும் இல்லை.
நேற்றின் சாம்பல்
சாம்பல் நிறத்திலிருக்கிறது.
நேற்றின் சாம்பலில்
பல்துலக்கிக் கொண்டிருக்கிறாள்
அம்மாத்தா கிழவி.
பன்னாட்டு நிறுவனத்தின்
பற்பசையில் எழுகிறது
என் அதிகாலைச் சூரியன்.
- மயூரா ரத்தினசாமி
|
No comments:
Post a Comment