சமுக உறவில் தேடுங்கள்

Sunday, May 6, 2012

மரூஉ

கோயம்புத்தூரில் அசைவ உணவகங்களில் "குஸ்கா" என்றொரு ஐட்டம் உண்டு. அசைவ, சைவ துண்டுகள் இல்லாத பிரியாணி தான் இது. இதற்குள் நீங்கள் சேர்க்கும் ஐட்டங்களை பொறுத்து இது மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, காக்கா பிரியாணி, நாய் பிரியாணி என்று நாமகரணம் பெறும். இந்த குஸ்காவையே கொஞ்சநாள் கழித்து Plain பிரியாணி என்றும், Empty பிரியாணி என்றும் தலைப்பிட்டனர். கவுண்டம்பாளையத்தில் நேற்று ஒரு கடையில் இதையே MT பிரியா...ணி என்று எழுதி வைத்திருந்ததை பார்த்தேன். நாளைய வரலாற்றாசிரியர்களுக்காக இந்த மரூஉ- வை பதிவு செய்கிறேன்.

இன்னொரு மரூஉ : முட்டை வாங்க மளிகை கடையில் நின்றுகொண்டிருந்தேன். பக்கத்துக்கு வீட்டு பெரியவர், "வாசு நாயக்கர் ஆஸ்பத்ரியில நல்ல கண் ஆபரேசன் செய்வாங்களா" என்றார். எனக்கு எந்த ஆஸ்பத்திரி என்று புரியவில்லை. அவர் மீண்டும், "அதான் தினமும் டிவியில விளம்பரம் பண்றாங்களே, அதுதான். அங்க பரவால்லையா" என்றார். சட்டென அவர் சொன்னது Vasan Eye Care Hospital என மண்டைக்குள் ஒரு பல்பு எரிந்தது. ஆங்கில உச்சரிப்பை அவர் அவ்வாறு புரிந்து கொண்டிருக்கிறார். இப்படித்தான் எங்கள் ஊரிலுள்ள பழமையான ராஜ வீதியை Raja Street என ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, அது தேசிய அளவில் இயங்கும் விளம்பர நிறுவனங்களிடம் போய் திரும்பவும் தமிழில் ராஜா தெருவாக மொழி பெயர்க்கப்பட்டு விளம்பரங்களில் இடம்பெற்றது. இதேபோல் காளப்பட்டி என்பது கலாபட்டி, வடவள்ளி என்பது வேதவல்லி என்றும் திரிந்து வந்தது. நல்லவேளை விளம்பரங்களில் சிறிய எழுத்துகளில் வந்ததால் அது நடைமுறையில் வரவில்லை.

ரத்தினசபாபதிபுரம் R.S. புரமாக, திவான் பகதூர் ரோடு D.B.ரோடாக உருமாற்றம் பெற்றதில் நம் அடையாளங்களை இழந்து விட்டோம். தமிழ்நாடு முழுவதும் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். கேரளாவில் Trivandrum என்று எழுதிக்கொண்டிருந்ததை ThiruvananthaPuram என்று எழுதுகிறார்கள். Mysore - Mysooru ஆகிவிட்டது. அனால் நாம் இன்னும் திருச்சியை Trichy, தூத்துக்குடியை Tuticorin, தஞ்சாவூரை Tanjore, கோயம்புத்தூரை Coimbatore, திண்டுக்கல்லை Dindigul என்றுதானே வெட்கமில்லாமல் எழுதிக்கொண்டிருக்கிறோம். ராமதாஸ் சும்மா இருந்தால் இதை கையில் எடுத்து கோடி பிடிக்கலாம்.

No comments:

Post a Comment